அதிகரிக்கும் டெங்கு நோயாளர்கள் : பொது மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
Sri Lankan Peoples
Dengue Prevalence in Sri Lanka
Hospitals in Sri Lanka
By Rakshana MA
3 months ago

Rakshana MA
இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 4,044 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.
இதன்படி, மேல் மாகாணத்திலேயே அதிகளவான நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதோடு, கம்பஹா மாவட்டத்தில் 614 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு மேலும் குறிப்பிட்டுள்ளது.
அதிகரிக்கும் நோயாளிகள்
இந்த நிலையில், கடந்த 3 வாரங்களில் பதிவான டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கைக்கு அமைய, 19 சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரிவுகள் அதிகளவு டெங்கு பரவல் அபாயமிக்க பகுதிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளன.
இதேவேளை, இந்த ஆண்டில் இதுவரையும் டெங்கு நோயினால் இருவர் உயிரிழந்துள்ளதாகவும் தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |