சில தொடருந்துகளில் தாமதம்! விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு

Sri Lankan Peoples Sri Lanka Railways Railways
By Fathima Dec 23, 2025 07:36 AM GMT

கொழும்பு, கோட்டை மற்றும் மருதானை தொடருந்து நிலையங்களுக்கு இடையில் ஒரு தொடருந்து தடம் புரண்டுள்ளது.

கொழும்பு கோட்டையிலிருந்து முற்பகல் 09.30 மணிக்கு மீரிகம நோக்கிப் பயணித்த கடுகதி ரயிலே இவ்வாறு தடம் புரண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதன் விளைவாக, கொழும்பு, கோட்டை மற்றும் மருதானை தொடருந்து நிலையங்களிலிருந்தும் புறப்படும் அனைத்து தொடருந்துகளும் தாமதமாக புறப்படும் என தொடருந்து திணைக்களம் அறிவித்துள்ளது.