கிணற்றிலிருந்து பெண்ணொருவரின் சடலம் மீட்பு

Sri Lanka Police Sri Lanka Police Investigation
By Mayuri Oct 16, 2024 07:59 AM GMT
Mayuri

Mayuri

பிலியந்தலை, மடபாத்த பிரதேசத்தில் உள்ள முதியோர் இல்லத்தில் பணிபுரிந்த பெண் உதவியாளர் ஒருவர் முதியோர் இல்லத்திற்கு அருகில் உள்ள கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த பெண்ணின் சடலம் இன்றைய தினம் மீட்கப்பட்டுள்ளதாக பிலியந்தலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

64 வயதுடைய பெண் உதவியாளரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

விசாரணையில் வெளியான தகவல்

முதியோர் இல்லத்தின் உரிமையாளர், கடுவலை பிரதேசத்தைச் சேர்ந்த நபரொருவர் ஊடாக கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்னர் சடலமாக மீட்கப்பட்ட பெண் உதவியாளரிடம் இந்த முதியோர் இல்லத்தை ஒப்படைத்துள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

கிணற்றிலிருந்து பெண்ணொருவரின் சடலம் மீட்பு | Dead Body Found In Piliyandhala

சடலமாக மீட்கப்பட்ட பெண்ணை அறிமுகம் செய்து வைத்ததாக கூறப்படும் கடுவலை பிரதேசத்தைச் சேர்ந்த நபர் தற்போது அப்பிரதேசத்தில் இல்லை என முதியோர் இல்லத்தின் உரிமையாளர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பிலியந்தலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW