இலங்கைக்கு தொன் கணக்காக அன்பளிப்பு செய்யப்பட்ட பேரீச்சம்பழங்கள்! எழுந்துள்ள சர்ச்சை
Iftar
By Fathima
50 தொன் எடை கொண்ட பேரீச்சம்பழங்களை இலங்கைக்கு, சவூதி அரேபியா அன்பளிப்பாக வழங்கியுள்ளது.
இந்த அன்பளிப்பு சவூதி அரேபிய மன்னர் சல்மான் மனிதாபிமான உதவி மற்றும் நிவாரண மையம் சார்பில் வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் 20 தொன் பேரீச்சம்பழம் சவூதி வேலைவாய்ப்பு பணியகத்திற்கு வழங்கப்பட்டுள்ளதாக மௌலவியொருவர் கேள்வியெழுப்பியுள்ளார்.
மேலும் நாடளாவிய ரீதியில் பதிவு செய்யப்பட்ட பள்ளிவாசல்களுக்து பேரீச்சம்பழம் கிடைக்கப்பெறாது இருப்பின் உடனடியாக திணைக்களத்தின் 0112667909 இலக்கத் தொலைபேசி ஊடாக கே.ஏ.சப்ரியை தொடர்பு கொள்ளுமாறு முஸ்லிம் சமய திணைக்கள பணிப்பாளர் இஸட்.ஏ.எம். பைஸல் கோரிக்கை விடுத்துள்ளார்.