காத்தான்குடியில் காய்த்து குலுங்கும் பேரீத்த மரங்கள்
Dates
Batticaloa
Sri Lankan Peoples
Eastern Province
By Rakshana MA
மட்டக்களப்பு - காத்தான்குடி பிரதான வீதியில் உள்ள பேரீத்த மரங்கள் இம்முறை ஏற்பட்டுள்ள கடுமையான வெப்பநிலை காரணமாக அதிகளவில் காய்த்துக் குலுங்குகிறது.
காய்த்து குலுங்கும் மரங்கள்
இவ்வாறு காய்த்து குலுங்கும் பேரீத்தம் மரங்களின் புகைப்படங்கள் சமூக வலையத்தளங்களில் அதிகளவில் பகிரப்பட்டு வருகின்றது.
குறித்த மரங்கள் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் காலப்பகுதில் காத்தான்குடி பிராதான வீதியில் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வின் முயற்சியினால் நடப்பட்டுள்ளன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை இந்த பேரீத்தம் மரங்கள் மிகக் கவர்ந்துள்ளதுடன், காத்தான்குடி நகர சபையின் பராமரிப்பில் இம்மரங்கள் கண்காணிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

