காத்தான்குடியில் 6 வயது சிறுவன் சடலமாக மீட்பு

Batticaloa Sri Lankan Peoples Eastern Province Accident
By Rakshana MA Jun 09, 2025 05:08 AM GMT
Rakshana MA

Rakshana MA

காத்தான்குடியில் 6 வயது சிறுவன் ஒருவன் ஆற்றில் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவமானது நேற்று(08) இடம்பெற்றுள்ளது.

காத்தான்குடி - 05 ஊர் வீதியைச் சேர்ந்த அனஸ் சூலைமான் அப்துல்லா என்ற சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

வட்ஸ்அப் செயலியில் புதிய நடைமுறை அறிமுகம்

வட்ஸ்அப் செயலியில் புதிய நடைமுறை அறிமுகம்

உயரிழந்த சிறுவன்

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

நேற்று காலை வீட்டில் தனியாக இருந்த சிறுவன், வீட்டிற்கு பின்னால் ஆற்றங்கரை பகுதிக்கு சென்ற நிலையில் இவ்வாறு ஆற்றுக்குள் விழுந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

சிறுவன் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாமல் இருப்பதை அவதானித்த பெற்றோர், உறவினர்கள் மற்றும் அண்டை வீட்டாருடன் இணைந்து தேடுதல் நடவடிக்கையில் ஈடபட்டுள்ளனர்.

காத்தான்குடியில் 6 வயது சிறுவன் சடலமாக மீட்பு | Kattankudy Heartbreaking Incident

அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கமெரா காட்சிகளை பார்வையிட்ட போது குறித்த சிறுவன் ஆற்றை அண்மித்து சென்ற காட்சிகள் பதிவாகியிருந்தன.

இதனை தொடர்ந்து, பிரதேச மக்கள் ஆற்றில் தீவிர தேடுதல்களை மேற்கொண்ட நிலையில் சிறுவன் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பாக காத்தான்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

புதிய வாகனங்களை வாங்குவோருக்கு முக்கிய அறிவிப்பு

புதிய வாகனங்களை வாங்குவோருக்கு முக்கிய அறிவிப்பு

போராட்டத்தில் குதிக்க தயாராகும் ஆசிரியர்கள்

போராட்டத்தில் குதிக்க தயாராகும் ஆசிரியர்கள்

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW