நாமல் உள்ளிட்டோருக்கு எதிரான முறைப்பாடு! விசாரணைக்கான திகதி தொடர்பில் வெளிவந்துள்ள தகவல்

Namal Rajapaksa
By Mayuri Sep 05, 2024 11:10 AM GMT
Mayuri

Mayuri

நாடாளுமன்ற உறுப்பினரும் பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளருமான நாமல் ராஜபக்ச உள்ளிட்டோருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள முறைப்பாடு எதிர்வரும் பெப்ரவரி மாதம் 13ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த முறைப்பாடு கொழும்பு பிரதான நீதவான் திலின கமகே முன்னிலையில் இன்று எடுத்துகொள்ளப்பட நிலையில் இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

15 மில்லியன் ரூபா முதலீடு

கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் போது நாமல் ராஜபக்ச சட்டவிரோதமாக சம்பாதித்த 15 மில்லியன் ரூபாவை முதலீடு செய்தமை தொடர்பில் இந்த முறைப்பாடு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

நாமல் உள்ளிட்டோருக்கு எதிரான முறைப்பாடு! விசாரணைக்கான திகதி தொடர்பில் வெளிவந்துள்ள தகவல் | Date Reference For Trial Against Namal Rajapaksa

மேலும் இந்த விசாரணை தொடர்பான அனைத்து ஆலோசனைகளும் சட்டமா அதிபருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக விசாரணைகளை மேற்கொண்ட குற்றப் புலனாய்வு திணைக்களம் நீதிமன்றில் தெரிவித்துள்ளது.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW