இஸ்லாமிய சமுதாயத்தின் பண்பாடு...!
பலரும் ஆச்சரியப்படும் அளவிற்கு பண்பாடுமிக்க சமுதாயமாக இஸ்லாமிய சமுதாயம் காணப்பட்டதை அரபு இணையத்தளமொன்று பதிவிட்டுள்ளது.
அந்த பதிவில்,உதுமானிய கிலாபத் ஆட்சிகாலத்தில் வீட்டின் நுழைவாயில் கதவின் ஒரு பக்கத்தில் மெல்லிய இரும்பு வளையமும் மறுபக்கம் தடித்த இரும்பு வளையமும் இணைக்கப்பட்டிருக்குமாம்.
இதற்கமைய வீட்டிற்கு பெண்கள் வந்தால் மெல்லிய வளையத்தைத் கதவில் அடிப்பார்கள்.
அப்படி மெல்லிய வளையத்தைத் கதவில் அடிக்கும் போது வந்திருப்பவர் பெண் என அறிந்து வீட்டினுள்ளே இருக்கும் பெண்கள் கதவைத் திறப்பார்கள்.
இஸ்லாமிய சமுதாயம்
இதேவேளை ஆண்கள் வந்தால், தடித்த இரும்பு வளையத்தைத் கதவில் அடிப்பார்கள். அப்படி தடித்த வளையத்தைத் கதவில் அடிக்கும் போது வந்திருப்பவர் ஆண் என அறிந்து வீட்டினுள்ளே இருக்கும் ஆண்கள் வந்து கதவைத் திறப்பார்கள்.
அதேபோன்று வீட்டில் முதியோர்களோ, நோயாளிகளோ இருந்தால் வீட்டு வாசலில் சிவப்பு நிற ரோஜாவை தொங்க விடுவார்களாம்.
இதற்கமைய அவ்வீட்டின் வழியே செல்லும் வியாபாரிகள், மக்கள், வாசலில் விளையாடும் குழந்தைகள் ஆகியோர் இவ்வீட்டினுள் முதியவர்கள், நோயாளிகள் இருப்பதை உணர்ந்து மௌனமாக செல்வார்கள் என பதிவிடப்பட்டுள்ளது.