நிமல் சிறிபால டி சில்வாவுக்கு அழைப்பாணை அனுப்பியுள்ள நீதிமன்றம்

Nimal Siripala De Silva
By Mayuri Jul 16, 2024 12:29 PM GMT
Mayuri

Mayuri

அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவுக்கு மாளிகாகந்த நீதவான் நீதிமன்றம் இன்று அழைப்பாணை அனுப்பியுள்ளது.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தலைமை அலுவலகத்துக்குப் பிரவேசிப்பதைத் தடுக்கும் வகையில் நுழைவாயில் பூட்டப்பட்டிருந்தமை தொடர்பில் அதன் பொதுச் செயலாளர் திலங்க சுமதிபால வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார்.

மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் விசாரணை

இந்த வழக்கு இன்றைய தினம் மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

நிமல் சிறிபால டி சில்வாவுக்கு அழைப்பாணை அனுப்பியுள்ள நீதிமன்றம் | Court Summons For Nimal Siripala De Silva

இதன்போது எதிர்வரும் 19ஆம் திகதி மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவுக்கு அழைப்பாணை விடுக்குமாறு நீதவான் லோச்சனி அபேவிக்ரம உத்தரவிட்டுள்ளார்.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW