இம்ரான் கானின் பிணையை ரத்து செய்வது தொடர்பில் பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவு

Pakistan Imran Khan
By Fathima Mar 23, 2023 08:41 PM GMT
Fathima

Fathima

தடை செய்யப்பட்ட நிதியுதவி வழக்கில் இம்ரான் கானின் பிணையை ரத்து செய்ய கோரி உயர்மட்ட விசாரணை அமைப்பு நீதிமன்றில் மனுதாக்கல் செய்தது.

இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் இரான் கானின் பிணையை ரத்து செய்ய மறுத்துவிட்டது.

பல்வேறு வழக்குகள் நிலுவை

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மீது ஊழல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது.

இம்ரான் கானின் பிணையை ரத்து செய்வது தொடர்பில் பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவு | Court Refuses To Cancel Imran Khan S Bail

சமீபத்தில் அவரை பொலிஸார் கைது செய்ய முயன்றபோது அவரது ஆதரவாளர்கள் பொலிஸாருடன் மோதலில் ஈடுபட்டுள்ளனர்.

பரிசு பொருள் மோசடி மற்றும் நீதிபதி, பொலிஸ் அதிகாரிகளை மிரட்டியது ஆகிய வழக்குகளில் இம்ரான் கான் நீதிமன்றில் முன்னிலையானதால் அவர் மீதான பிடியாணை ரத்து செய்யப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் இம்ரான் கான் மீது தடை செய்யப்பட்ட நிதியுதவி வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

மத்திய புலனாய்வு அமைப்பு விசாரணை

இம்ரான் கானின் பிணையை ரத்து செய்வது தொடர்பில் பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவு | Court Refuses To Cancel Imran Khan S Bail

இது தொடர்பாக அந்நாட்டு மத்திய புலனாய்வு அமைப்பு விசாரணை நடத்தி வருகிறது.

இந்த வழக்கில் இம்ரான் கானுக்கு இஸ்லாமாபாத் நீதிமன்றம் பிணை வழங்கியது.

இந்த நிலையில் உயர்மட்ட விசாரணை அமைப்பின் கோரிக்கையை நீதிமன்றில் மனுதாக்கல் செய்தது.

இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் இரான் கானின் பிணையை ரத்து செய்ய மறுத்துவிட்டது.