சாமர சம்பத்திற்கு எதிராக நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

Law and Order Court of Appeal of Sri Lanka MP Chamara Sampath Dassanayake
By Rukshy Aug 29, 2025 07:21 AM GMT
Rukshy

Rukshy

நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்கவுக்கு எதிரான இரண்டு குற்றச்சாட்டுக்களுக்கு எதிரான வழக்குகளை ஜனவரி 23ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள கொழும்பு தலைமை நீதவான் அசங்க எஸ். போதரகம உத்தரவிட்டுள்ளார்.

ஊவா மாகாண சபையின் பெயரில் அரச வங்கிகளில் வைத்திருந்த ஆறு நிலையான கணக்குகளை முதிர்ச்சிக்கு முன்னர் திரும்பப் பெற்றதன் மூலம் அரசாங்கத்திற்கு ரூ. 1.73 மில்லியன் இழப்பை ஏற்படுத்தியதாகக் கூறி, நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்கவுக்கு எதிராக முறைப்பாடு பதிவு செய்யப்பட்டிருந்த நிலையிலேயே குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தலைமறைவாகியிருந்த ராஜித தொடர்பில் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

தலைமறைவாகியிருந்த ராஜித தொடர்பில் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

இலஞ்ச ஊழல் சட்டத்தின்

பிணையில் உள்ள சாமர சம்பத் தசநாயக்க நீதிமன்றத்தில் முன்னிலையான பின்னர், ஆவணங்கள் தொடர்பான பகுப்பாய்வாளர் அறிக்கைகள் இன்னும் பெறப்படவில்லை என்று இலஞ்ச ஊழல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

சாமர சம்பத்திற்கு எதிராக நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு | Court Order Against Chamara Sampath

அதன்படி, ஆவணங்களை வரவழைக்க நினைவூட்டல் அனுப்ப உத்தரவிட்ட தலைமை நீதவான், முறைப்பாட்டாளர்களின் விசாரணையை ஜனவரி 23 ஆம் திகதி வரை ஒத்திவைத்துள்ளார்.

சாமர சம்பத் தசநாயக்க, ஊவா மாகாண சபையின் முதலமைச்சராக இருந்தபோது, மாகாணத்தில் உள்ள பாடசாலை மாணவர்களுக்கு ஒரு பையை வழங்க வங்கியிடம் நிதியுதவி கோரியுள்ளார்.

ஆனால் இந்த ஆறு கணக்குகளையும் வேண்டுமென்றே மூடிய நிலையில், இலஞ்ச ஊழல் சட்டத்தின் பிரிவு 70 இன் கீழ் இந்த விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

தலைமறைவாகியிருந்த ராஜித தொடர்பில் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

தலைமறைவாகியிருந்த ராஜித தொடர்பில் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு