500 கோடி ரூபா மோசடி செய்த தம்பதியினர் கைது

Sri Lanka Police Kandy
By Dhayani Jan 27, 2024 03:06 PM GMT

பிரமிட் திட்டத்தின் கீழ் 500 கோடி ரூபா மோசடி செய்ததாக சந்தேகத்தின் பேரில் தம்பதியினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த தம்பதியினர் கண்டியில் தலைமறைவாகியிருந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவினரால் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளுக்கு அமைய இந்த கைது இடம்பெற்றுள்ளது.