ஆண்கள் தகாதமுறைக்குட்படுத்தப்பட்டால் முறைப்பாடு : வெளியான தகவல்

Sri Lanka Police Sri Lanka Sri Lankan Peoples
By Shalini Balachandran Aug 03, 2024 11:19 AM GMT
Shalini Balachandran

Shalini Balachandran

பெண்களிடம் இருந்து ஆண்கள் தகாதமுறைக்குட்படுத்தப்பட்டால் காவல் நிலையத்தில் முறைப்பாடளிக்க முடியும் என இலங்கை பொலிஸார் தெரிவித்துள்ளது.

இந்தநிலையில், 1995 ஆம் ஆண்டின் 22 ஆம் இலக்க தண்டனைச் சட்ட திருத்தச் சட்டத்தின் 345 ஆவது பிரிவின் கீழ் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த குற்றச் செயல் தொடர்பில் சட்டத்தை முன்னிலைப்படுத்துவதில் ஆண் மற்றும் பெண் என்ற பாகுபாடு காட்டப்படவில்லை எனவும் பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.

கதிர்காமம் வீதியில் புலிகளின் நடமாட்டம் அதிகரிப்பு: பயணிப்போருக்கு எச்சரிக்கை

கதிர்காமம் வீதியில் புலிகளின் நடமாட்டம் அதிகரிப்பு: பயணிப்போருக்கு எச்சரிக்கை

தகாதமுறை நடவடிக்கை

இதனடிப்படையில், ஒரு ஆணோ அல்லது ஆண் சிறுவனோ ஏதேனும் தகாதமுறை நடவடிக்கைகளுக்கு உள்ளானால் அவர் தயக்கமின்றி அருகிலுள்ள பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆண்கள் தகாதமுறைக்குட்படுத்தப்பட்டால் முறைப்பாடு : வெளியான தகவல் | Complaint Procedures For Male Sexual Abuse

மேலும், சமூகத்தில் பதிவாகும் சம்பவங்களை அவதானிக்கும் போது பொலிஸ் நிலையங்களில் வயது முதிர்ந்த பெண்களால் ஆண்கள் தகாதமுறைக்குட்படுத்தப்படும் சம்பவங்கள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தேர்தல்கள் ஆணைக்குழுவில் வைத்து வழங்கப்படவுள்ள ஆலோசனை

தேர்தல்கள் ஆணைக்குழுவில் வைத்து வழங்கப்படவுள்ள ஆலோசனை

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW