தென்னைமரங்களில் வெண்ணிற ஈ நோய் தாக்கம் அதிகரித்து வருவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்

Trincomalee
By Nafeel Apr 15, 2023 04:13 AM GMT
Nafeel

Nafeel

திருகோணமலை மாவட்டத்தில் கந்தளாய் பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளில் வெண்ணிற ஈ நோய்த் தாக்கம் சுமார் ஐயாயிரத்துக்கும் மேட்பட்ட ஏக்கர் தென்னை மரங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர் .

கந்தளாய் பேராறு பேராற்று வெளி வட்டுகச்சி வான் ஏல அக்போபுர அக்போகம முள்ளிப்பொத்தானை தம்பலகாமம் இது போன்ற இடங்களில் இத்தாக்கம் வேகமாக பரவி வருவதாக தெரிவிக்கின்றனர் .

இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம்  பலமுறை அறிவித்த போதும் இதுவரைக்கும் பார்வையிடவில்லை எனவும் தெரிவிக்கின்றனர்.

அரசாங்கம் இந்த வெண்ணிற ஈ நோயைக் கட்டுப்படுத்தி தருமாறு மக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர் .