தேங்காய் விலையில் ஏற்பட்டுள்ள சடுதியான மாற்றம்!
ஒரு காலத்தில் நாட்டில் பாரிய சிக்கலை ஏற்படுத்திய தேங்காய் விலை உயர்வு, தற்போது குறைவடைந்து வருவதால் மக்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
கொழும்பு உள்ளிட்ட பிரதேசங்களில், ஒரே தேங்காயின் விலை 220 ரூபாயிலிருந்து 250 ரூபாய் வரையிலான அளவில் காணப்பட்ட நிலையில், தற்போது அது 130 ரூபாயிலிருந்து 185 ரூபாய் வரையில் விற்பனை செய்யப்படுவதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
தேங்காய் விலை அதிகரிப்பு
அண்மைக்காலமாக தேங்காயின் விலை 200 ரூபாயை மீறி உயர்ந்த நிலையில் காணப்பட்டதோடு, தற்போது அதில் ஏற்பட்டுள்ள இச்சிக்கல் தீர்வு பொதுமக்களின் நாளாந்த செலவில் சிறிய தளர்வை ஏற்படுத்தியுள்ளது.
இதேவேளை, கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடும்போது, இந்த ஆண்டின் ஜூன் மாதங்களில் தேங்காய் அறுவடையில் கணிசமான உயர்வு காணப்படும் என லுணுவில தேங்காய் ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
2024ஆம் ஆண்டு மே மற்றும் ஜூன் மாதங்களில் மட்டும் 477 மில்லியன் தேங்காய்கள் அறுவடை செய்யப்பட்டுள்ளதோடு, இவ்வாண்டு முழுவதும் தோராயமாக 555 மில்லியன் தேங்காய்கள் அறுவடை செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அரசாங்கத்தின் திட்டம்
மேலும், தேங்காய்த் தொழில்களை ஊக்குவிப்பதற்காக அரசாங்கம் மேற்கொண்ட மூலப்பொருள் இறக்குமதி திட்டத்தின் கீழ், ஒரு தேங்காய் பால் கப்பல் கடந்த ஜூன் 3ஆம் திகதி இலங்கை வந்தடைந்துள்ளது.
உறைந்த தேங்காய் பால், பவுடர் மற்றும் துண்டுகளாக்கப்பட்ட தேங்காய்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய இந்த தொகுதி, 200 மில்லியன் தேங்காய்களுக்கு இணையானதாகும்.
இந்த தொகுதி சுங்க அனுமதி மற்றும் ஆய்வக சோதனைக்கு உட்படுத்தப்பட்டிருந்ததையும் அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |