எரிபொருள் சேமிப்பு குறித்து வெளியான தடை உத்தரவு

Fuel Price In Sri Lanka Sri Lankan Peoples Sri Lanka Fuel Crisis Fuel Price In World National Fuel Pass
By Rakshana MA Jun 19, 2025 04:58 AM GMT
Rakshana MA

Rakshana MA

பீப்பாய்கள் மற்றும் கேன்களில் எரிபொருள் வழங்குவது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.

பீப்பாய்கள் மற்றும் கேன்களில் எரிபொருளைப் பெறுவதற்காக நுகர்வோர் தன்னிச்சையாக எரிபொருள் நிரப்பு நிலையங்களில் கூடி தேவையற்ற நெரிசல் மற்றும் வரிசைகளை உருவாக்குவதனாலேயே குறித்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேலிய நாடாளுமன்ற உறுப்பினர்களை கதிகலங்க வைத்த ஈரானிய அழைப்புகள்..!

இஸ்ரேலிய நாடாளுமன்ற உறுப்பினர்களை கதிகலங்க வைத்த ஈரானிய அழைப்புகள்..!

உடனடி தடை விதிப்பு

இலங்கை பெட்றோலியக் கூட்டுத்தாபனத்தில் போதுமான எரிபொருள் கையிருப்பு இருக்கின்ற போதிலும் வாடிக்கையாளர்களின் தேவையற்ற பயத்தின் காரணமாக இச்செயற்பாடு தோன்றுவதனால் வாகனங்களின் தாங்கிகளை தவிர பிற கொள்கலன்கள் மற்றும் பீப்பாய்களில் எரிபொருள் விநியோகிப்பது உடனடியாக தடை செய்யப்பட்டுள்ளது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

எரிபொருள் சேமிப்பு குறித்து வெளியான தடை உத்தரவு | Qr System Fuel Sri Lanka

எரிபொருள் நிரப்பு நிலையங்களின் உரிமையாளர்களுக்கு இது தொடர்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் மேலும் அதற்கு மாறாகச் செயல்பட்டால் அவர்கள் மீது கடுமையான ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளது.

நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் செயற்கையாக ஏற்படுத்தப்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாட்டை கருத்திற்கொண்டு எரிபொருள் மாபியாக்கள் தலையெடுக்கு முன்னர் QR முறையை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டுமென சில தரப்பினர் அரசிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

கல்முனையில் போதைப்பொருள் எதிர்ப்பு மாநாடு முன்னெடுப்பு

கல்முனையில் போதைப்பொருள் எதிர்ப்பு மாநாடு முன்னெடுப்பு

பொதுமக்களுக்கான அறிவித்தல்

மேலும் நாட்டில் பெற்றோல் பற்றாக்குறை இருப்பதாக பரப்பப்படும் போலி செய்திகளுக்கு பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம் என்று எரிசக்தி அமைச்சு அறிவித்துள்ளது.

மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றம் காரணமாக நாட்டில் பெற்றோல் பற்றாக்குறை ஏற்படக்கூடும் என தவறான செய்திகள் சமூக ஊடகங்களில் பரவி வருவதாக அமைச்சு ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.

எரிபொருள் சேமிப்பு குறித்து வெளியான தடை உத்தரவு | Qr System Fuel Sri Lanka

ஆனாலும், இலங்கை பெட்றோலியக் கூட்டுத்தாபனத்திடம் தற்போது அடுத்த இரண்டு மாதங்களுக்குத் தேவையான எண்ணெய் இருப்பு உள்ளதாக எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

முன்னதாக இறக்குமதி செய்யப்பட்ட எண்ணெய் இருப்புகளை எந்தப் பிரச்சினையும் இல்லாமல் பெற தேவையான நடவடிக்கைகள் தயாராக உள்ளதாகவும், இது தொடர்பாக பரப்பப்படும் போலிச் செய்திகளால் பொதுமக்கள் ஏமாற வேண்டாம் என்று எரிசக்தி அமைச்சு வலியுறுத்தியுள்ளது.

கிண்ணியா பிரதேச சபை மற்றும் நகர சபைக்கான தவிசாளர் தெரிவு

கிண்ணியா பிரதேச சபை மற்றும் நகர சபைக்கான தவிசாளர் தெரிவு

நபிவழி மருத்துவம் - வெங்காயம்

நபிவழி மருத்துவம் - வெங்காயம்

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW