நாட்டில் அதிகரிக்கும் மழைவீழ்ச்சி!

Sri Lankan Peoples Climate Change Weather
By Rakshana MA Mar 24, 2025 04:12 AM GMT
Rakshana MA

Rakshana MA

நாட்டின் சில இடங்களில் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் தெரிவித்ததாவது,

இதற்கமைய மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும், காலி, மாத்தறை, குருநாகல் மற்றும் மன்னார் மாவட்டங்களிலும் பிற்பகல் 2.00 மணிக்குப் பிறகு மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும்.

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 50 மில்லிமீற்றருக்கு மேல் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

அக்கரைப்பற்று – அம்பாறை பிரதான வீதியில் விபத்து

அக்கரைப்பற்று – அம்பாறை பிரதான வீதியில் விபத்து

விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

ஊவா மாகாணத்திலும் அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என குறிப்பிட்டுள்ளது.

நாட்டில் அதிகரிக்கும் மழைவீழ்ச்சி! | Climate Change Today

மேலும், பனிமூட்டம் இடியுடன் கூடிய மழை ஏற்படும் சந்தர்ப்பங்களில் தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்குதல்களிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ளத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதற்கிடையில், மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும், காலி, மாத்தறை மற்றும் குருநாகல் மாவட்டங்களிலும் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டம் நிறைந்து காணப்படும்.  

அக்கரைப்பற்றில் இளைஞர் ஒருவர் உழவு இயந்திரத்தில் சிக்கி பலி

அக்கரைப்பற்றில் இளைஞர் ஒருவர் உழவு இயந்திரத்தில் சிக்கி பலி

உள்ளூராட்சித் தேர்தல் குறித்த புகார்களைச் சமர்ப்பிக்க புதிய மொபைல் செயலி

உள்ளூராட்சித் தேர்தல் குறித்த புகார்களைச் சமர்ப்பிக்க புதிய மொபைல் செயலி

         நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW