காரைதீவில் சுற்றுச்சூழல் சுகாதாரம் தொடர்பான கள ஆய்வு
அம்பாறை(Ampara) மாவட்டம் மாளிகைக்காடு கிழக்கு கடற்கரை பகுதி சுற்றுசூழல் சுகாதாரம் தொடர்பான கள ஆய்வு மற்றும் கழிவகற்றல் முகாமைத்துவம் தொடர்பான பரிசோதனை நடைபெற்றுள்ளது.
இதன்போது இப்பகுதி வியாபார நிலையங்களின் திண்ம, திரவ கழிவகற்றல் முகாமைத்துவம் தொடர்பான தொழிநுட்ப திட்ட ஆலோசனைகள் சுகாதார வைத்திய அதிகாரியால் முன் மொழியபட்டன.
ஆலோசனைகள்
மேலும், இப்பகுதியில் அனைத்து அரச நிறுவங்களின் பங்களிப்போடும் டெங்கு கட்டுப்பாட்டு நடவடிக்கை தொடர்ச்சியாக மேற்கொள்வது தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டுள்ளன.
மேலும், குறித்த பரிசோதனை நிகழ்வில் காரைதீவு பிரதேச செயலாளர் ஜீ. அருணன், காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் தஸ்லீமா வசீர் உள்ளிட்ட திணைகள உத்தியோகதர்கள் என பலர் கலந்து கொண்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |




