மூதூரில் பொலிஸார் முன்னெடுத்த விசேட திட்டம்
தேசிய சுற்றாடல் வாரத்தை முன்னிட்டு மூதூர் திரிசீடி சந்தியிலிருந்து இரால்குழி பாலம் வரையான வீதி இன்று செவ்வாய்கிழமை (03) காலை சிரமதானம் மூலம் துப்பரவு செய்யப்பட்டது.
இந்த சுத்தம் செய்யும் நிகழ்வானது, கிளீன் சிறிலங்கா நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் மூதூர் பொலிஸ் நிலையத்தின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்டது.
சிரமதான நிகழ்வு
இந்த சிரமதானத்திற்கு மூதூர் பிரதேச சபை, சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை, தேசிய மக்கள் சக்தியின் மூதூர் கிளை, மூதூர் மத்திய கல்லூரி என்பன அனுசரணை வழங்கியிருந்தன.
மேலும், இந்த சிரமதானப் பணியில் பாடசாலை மாணவர்கள், பொலிஸார், மூதூர் பிரதேச சபை ஊழியர்கள், தேசிய மக்கள் சக்தியின் மூதூர் கிளை உறுப்பினர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |




