திருகோணமலையில் பொலிஸார் மற்றும் இளைஞர்களிடையே மோதல்
                                    
                    Trincomalee
                
                                                
                    Sri Lanka Police Investigation
                
                                                
                    Eastern Province
                
                                                
                    Crime
                
                        
        
            
                
                By Laksi
            
            
                
                
            
        
    திருகோணமலை- நிலாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில், வீதி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த இரண்டு பொலிஸார் தாக்கப்பட்ட சம்பவமொன்று பதிவாகியுள்ளது.
தலைக்கவசம் அணியாமல் சென்ற மோட்டார் சைக்கிள் ஓட்டுனரை நிறுத்த பொலிஸார் முயன்றபோது, குறித்த ஓட்டுனர் அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
மோதல்
இதனையடுத்து, சந்தேகநபர்களுடன் சிலர் சேர்ந்து பொலிஸாரை வீடொன்றுக்குள் இழுத்து அடைத்து தாக்கியுள்ளனர்.
மேலும், இதன்போது பொலிஸாரின் கையடக்க தொலைபேசியை சேதப்படுத்தி, தகாத வார்த்தைகளைப் பயன்படுத்தியதாகவும் தெரியவந்துள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW | 
 
                 
                 
                                             
     
     
     
     
     
     
     
     
     
    