எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பல் அனர்த்தம்: இழப்பீடு கோரி எடுக்கப்பட்டுள்ள சட்ட நடவடிக்கை

Attorney General of Sri Lanka Singapore Economy of Sri Lanka Sri Lanka Fisherman Ship
By Fathima Apr 23, 2023 08:54 AM GMT
Fathima

Fathima

2021 ஆம் ஆண்டு "எக்ஸ்பிரஸ் பேர்ல்" கப்பல் அனர்த்தம் தொடர்பில் இழப்பீடு கோரி சிங்கப்பூர் மேல் நீதிமன்றத்தில் இலங்கை நாளை(24.04.2023) சட்ட நடவடிக்கைகளை ஆரம்பிக்கவுள்ளதாக சட்டமா அதிபர் சஞ்சய் ராஜரத்தினம் தெரிவித்துள்ளார்.

குறிப்பிட்ட வழக்கை இலங்கையில் நடத்தவேண்டும் என்ற கோரிக்கை உள்ள போதும், வழக்கின் பிரதிவாதிகள் கப்பலின் பதிவு செய்யப்பட்ட உரிமையாளர், நடத்துநர் மற்றும் மேலாளர்கள் உட்பட வணிக இருப்பு சிங்கப்பூராக இருப்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பல் அனர்த்தம்: இழப்பீடு கோரி எடுக்கப்பட்டுள்ள சட்ட நடவடிக்கை | Claims Legal Action Against Express Pearl Ship

எனவே பேரழிவு தொடர்பான உரிமைகோரல் நடவடிக்கையை நிறுவுவதற்கு சிங்கப்பூர் பொருத்தமான இடமாக இருக்கும் என்று சட்டமா அதிபர் திணைக்களம் தெரிவித்துள்ளது.

சட்டமா அதிபர் திணைக்களம் 

கப்பலில் இருந்து வெளியேற்றப்படும் பிளாஸ்டிக்துகள்களால் இலங்கையின் கடல்சார் சுற்றுச்சூழலுக்கு நீண்டகாலமாக ஏற்படும் சேதத்தின் முழு அளவு மற்றும் ஈர்ப்புத்தன்மை குறித்த இந்த நடவடிக்கை சர்வதேச கவனத்தை ஈர்க்கும் என்றும் சட்டமா அதிபர் திணைக்களம் தெரிவித்துள்ளது.

எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பல் அனர்த்தம்: இழப்பீடு கோரி எடுக்கப்பட்டுள்ள சட்ட நடவடிக்கை | Claims Legal Action Against Express Pearl Ship 

2021ஆம் ஆண்டு மே 20 ஆம் திகதியன்று 1488 கொள்கலன்களுடன் சிங்கப்பூர் கொடியிடப்பட்ட கொள்கலன் கப்பல் தீப்பிடித்தது.

25 தொன் நைட்ரிக் அமிலம், 348 தொன் எண்ணெய் மற்றும் 75 பில்லியன் சிறிய பிளாஸ்டிக் துகள்கள் உட்பட ஆபத்தான பொருட்களுடன் மொத்தம் 81 கொள்கலன்கள் இருந்தன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.