சி.ஐ.டிக்கு இன்று வர வேண்டாம்..! சமன் ஏக்கநாயக்கவுக்கு விடுத்துள்ள அறிவிப்பு
CID - Sri Lanka Police
Crime
Saman Ekanayake
By Rukshy
முன்னாள் ஜனாதிபதி செயலாளர் சமன் ஏக்கநாயக்க இன்று(01) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாக வேண்டிய அவசியமில்லை என்று குற்றப் புலனாய்வுத் திணைக்களம் அறிவித்துள்ளது.
முன்னாள் ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு இன்று அவர் முன்னிலையாக வேண்டாம் என்று அறிவிக்கப்பட்டதாக கூறியுள்ளது.
இங்கிலாந்து பயணம் தொடர்பான விசாரணைக்காக வாக்குமூலம் அளிக்க இன்று காலை 9 மணிக்கு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகுமாறு முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.