திருகோணமலையில் முன்பள்ளி பாடசாலை மாணவர்களின் சிறுவர் சந்தை
Trincomalee
Sri Lankan Peoples
Eastern Province
By Rakshana MA
திருகோணமலை, கிளிவெட்டி -ஆஷாத்நகர் தாருல் ஹாதி முன்பள்ளிப் பாடசாலையின் சிறுவர் சந்தை ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த சிறுவர் சந்தையானது, இன்று (22) காலை இடம்பெற்றது.
சிறுவர் சந்தை
சிறுவர் சந்தையில் விளையாட்டு உபகரணங்கள், தீன்பண்டங்கள், மரக்கறி வகையில், கைவினைப் பொருட்கள் உள்ளிட்டவைகள் காட்சிப்படுத்தப்பட்டு விற்பனையும் செய்யப்பட்டன.
அத்துடன், சிறுவர் சந்தையையை பார்வையிட அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், கிராம உத்தியோகத்தர்கள், கிராம சங்கங்களின் பிரதிநிதிகள், பாடசாலை மாணவர்கள், கிராம மக்கள் உள்ளிட்டோர் வருகை தந்திருந்தனர்.
மேலும், முன்பள்ளி ஆசிரியைகள், நிருவாகத்தினர் ஆகியோர் இணைந்து சிறுவர் சந்தையினை ஏற்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |