புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில் திறந்து வைக்கப்பட்ட புதிய பிரிவு

Sri Lanka Police Kilinochchi Mullaitivu
By Aadhithya Jul 02, 2024 01:17 PM GMT
Aadhithya

Aadhithya

சிறுவர் மற்றும் பெண்கள் தவறான முறைக்கு உட்படுத்தப்படுவதை தடுப்பதற்கான பிரிவொன்று முல்லைத்தீவு (Mullaitivu) - புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில் புதிதாக திறந்து வைக்கப்பட்டுள்ளது.

குறித்த நிகழ்வானது இன்று (02) புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம்.பி.ஆர்.ஹெரத் தலைமையில் இடம்பெற்றுள்ளது.

இதற்கான கட்டடத்தை வடமாகாண சிரேஷ்ட பொலிஸ் மா அதிபர் திலக் சி.ஏ.தனபால திறந்து வைத்துள்ளார்.

சிறார்களின் நிகழ்வு

இந்த நிகழ்வில் சிறார்களின் நடன நிகழ்வு இடம்பெற்றிருந்ததனை தொடர்ந்து கலந்து கொண்ட அதிதிகளால் மரநடுகையும் இடம்பெற்றுள்ளது.

புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில் திறந்து வைக்கப்பட்ட புதிய பிரிவு | Child Women New Unit Open Mullaitivu

குறித்த நிகழ்வில் கிளிநொச்சி (Kilinochchi), முல்லைத்தீவு பிரதி பொலிஸ் மா அதிபர் சமந்த டி சில்வா, 593 பிரிக்கேட் கொமாண்டர் பிரிகேடியர் அணில் சோமவீர, முல்லைத்தீவு மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் சந்திரசேன, உதவி பொலிஸ் அத்தியட்சகர் லசந்த விதாரன, முல்லைத்தீவு மாவட்ட சிறுவர் நன்னடத்தை பொலிஸ் பொறுப்பதிகாரி குமாரி ஆரியரத்ன, புதுக்குடியிருப்பு ஆதார வைத்தியசாலை அத்தியட்சகர் பரணிதரன், மூங்கிலாறு பிரதேச வைத்தியசாலை வைத்தியர், புதுக்குடியிருப்பு பிரதேச செயலக பெண்கள் சிறுவர் உத்தியோகத்தர், புதுக்குடியிருப்பு காவல்துறை ஆலோசனை குழு உறுப்பினர் த.நவநீதன், இணக்க சபை உபதலைவர் ஐ.மாதவராசா, புதுக்குடியிருப்பு இலங்கை வங்கி முகாமையாளர், சிவில் பொலிஸ் பாதுகாப்பு குழு, கிராம சேவகர், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW !  


GalleryGalleryGalleryGalleryGallery