தாய்க்கு தெரியாமல் சிறுவன் செய்த செயல் மரணத்தில் முடிந்த சோகம்

Sri Lanka Police Sri Lanka Sri Lankan Peoples Accident
By Chandramathi Apr 12, 2024 02:19 AM GMT
Chandramathi

Chandramathi

மொரட்டுவை - முரவத்தை தொடருந்து கடவைக்கு அருகில் தொடருந்தில் மோதி 9 வயது சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தாயிக்கு தெரியாமல் துவிச்சக்கர வண்டியில் பயணித்த போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்து

விபத்தில் சிறுவனின் கால் துண்டிக்கப்பட்டதாகவும், உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட போதிலும், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாய்க்கு தெரியாமல் சிறுவன் செய்த செயல் மரணத்தில் முடிந்த சோகம் | Child Death In Morattuwa

மொரட்டுவை - மொரட்டுவெல்ல - க்ளோவியஸ் மாவத்தையில் வசித்து வந்த எம். ஆர்.ரந்தரு என்ற சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த சிறுவன், புதிய காலி வீதியில் இருந்து தனது துவிச்சக்கரவண்டியில் பயணித்த போது தொடருந்து பாதுகாப்பு கடவை அருகில் துவிச்சக்கரவண்டியை அவர் நிறுத்தியிருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொலிஸார் விசாரணை

அப்போது, ​​கொழும்பில் இருந்து காலி நோக்கி தொடருந்து பயணித்து கொண்டிருந்ததாகவும், பாதுகாப்பு கடவையை திறக்கப்படுவதற்கு முன்னர், குறித்த சிறுவன் தனது துவிச்சக்கரவண்டியை தண்டவாளத்தின் ஊடாக செலுத்தியுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

தாய்க்கு தெரியாமல் சிறுவன் செய்த செயல் மரணத்தில் முடிந்த சோகம் | Child Death In Morattuwa

இதன்போது ​​பெலியத்தவில் இருந்து கண்டி நோக்கி பயணித்த தொடருந்தும் மற்றைய தொடருந்து மார்க்கத்தின் ஊடாக பயணித்த போது, சிறுவனின் துவிச்சக்கர வண்டி அதில் மோதியுள்ளது.

இந்த விபத்தில், சிறுவன் சுமார் 13 மீட்டர் தூரம் தூக்கி வீசப்பட்டதாகவும் பின்னர் சம்பவம் இடம்பெற்ற, அருகில் தொடருந்து நிறுத்தப்பட்டதாகவும் பொலிஸ் விசாரணையில் தெரியவந்தது.

மொரட்டுவை தலைமையக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.