சிலாபம் பொது வைத்தியசாலை மறு அறிவித்தல் வரை மூடல்!

Puttalam Hospitals in Sri Lanka Floods In Sri Lanka
By Fathima Dec 01, 2025 09:52 AM GMT
Fathima

Fathima

கனமழையால் சேதமடைந்த சிலாபம் பொது வைத்தியசாலை, மறு அறிவித்தல் வரும் வரை தற்காலிகமாக மூடப்படும் என்று வைத்தியசாலை பணிப்பாளர் சிறப்பு மருத்துவர் சுமித் அத்தநாயக்க தெரிவித்தார்.

வைத்தியசாலை ஏற்கனவே வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாகவும், தற்போது வைத்தியசாலை ஐந்து அடிக்கும் அதிகமான தண்ணீரால் நிரம்பியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

கடுமையான பிரச்சினை

இதன் காரணமாக, வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளிகள் விமானப்படை ஹெலிகொப்டர்கள் மூலம் கொழும்பு மற்றும் புத்தளம் வைத்தியசாலைகளுக்கு வெளியேற்றப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

சிலாபம் பொது வைத்தியசாலை மறு அறிவித்தல் வரை மூடல்! | Chilaw Hospital Temporarily Closed Until Notice

வெள்ள நீர் மட்டம் ஓரளவு குறைந்த பிறகு, கடற்படை மற்றும் இராணுவத்தின் தலையீட்டால் மற்ற நோயாளிகளும் வாரியபொல மற்றும் குருநாகல் வைத்தியசாலைகளுக்கு வெளியேற்றப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார். 

வெள்ளம் காரணமாக வைத்தியசாலையின்  சிடி ஸ்கேன் இயந்திரம் கூட சேதமடைந்துள்ளதாகவும், வார்டுகள் வெள்ளத்தில் மூழ்கி பல கடுமையான பிரச்சினைகளை எதிர்கொண்டதாகவும் தெரிவித்துள்ளார். 

அதன்படி, வைத்தியசாலை இயல்பு நிலைக்குத் திரும்பிய பிறகு மீண்டும் திறக்க முடியும் என்றும், ஆனால் அது எப்போது நடக்கும் என்று சொல்ல முடியாததால், மறு அறிவிப்பு வரும் வரை எந்த நோயாளிகளையும் சிலாபம் பொது மருத்துவமனைக்கு அழைத்து வரக்கூடாது என்றும் வைத்தியசாலை பணிப்பாளர் மேலும் தெரிவித்தார்.