மட்டக்களப்பில் முஸ்லிம் காங்கிரஸ் ஒப்பந்தத்தை மறுக்கும் சாணக்கியன்
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸுடன் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒப்பந்தங்கள் செய்திருக்கின்றோம் எனச்சொல்வது முற்றுமுழுவதுமாக பொய்யான விடயமாகும் என தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் சத்தியப்பிரமாணம் செய்யும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில், “நாங்கள் போட்டியிட்ட அனைத்து சபைகளிலும் தவிசாளர் பதவி எங்கள் கட்சிக்குத்தான் கிடைக்க வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கின்றோம்.
முஸ்லிம் காங்கிரஸ் கட்சி
நாங்கள் சிறுபான்மையாக இருக்கும் ஓட்டமாவடி மற்றும் ஏறாவூர் ஆகிய இரண்டு சபைகளிலும் இலங்கைத் தமிழரசுக் கட்சியைச் சேர்ந்த எங்களுடைய உறுப்பினர்கள் தான் தவிசாளரை தீர்மானிக்கும் சக்தியாக இருக்கின்றார்கள்.
தேர்தலுக்கு முன்பாக நாங்கள் கூறியதற்கு இணங்க மக்கள் வாக்களித்திருக்கின்றார்கள். எங்களுடைய உறுப்பினர்கள் வெற்றியடைந்திருக்கின்றார்கள்.
நாங்கள் சில சபைகளில் முஸ்லிம் காங்கிரஸுடன் இணைந்து ஆட்சியமைக்க வேண்டிய தேவை இருக்கின்றது.
தவிசாளராக தமிழர் நியமனம்
குச்சவெளி, மூதூர் போன்ற சபைகளிலே 40 சதவீதமான தமிழர்களும் 60 சதவீதமான முஸ்லிம்களும் உள்ள மூதூர் சபையில் தமிழர் ஒருவரை தவிசாளராக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் நியமித்திருக்கின்றது.
யாழ்.மாநகர சபையில் நாங்கள் எங்களுக்கு கிடைத்த பட்டியல் ஆசனத்தை முஸ்லிம் உறுப்பினருக்கு வழங்கியதாக எங்களுடைய கட்சிக்கு வெளியில் இருப்பவர்கள் விமர்சித்திருக்கின்றனர்.
அதேநேரம், 60 சதவீதமான முஸ்லிம்கள் வாழும் மூதூர் சபையிலே தமிழர் ஒருவரை தவிசாளராக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் நியமித்திருக்கின்றது” எனத் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |