சாய்ந்தமருது நகர சபை விடயத்தில் சர்ச்சை தகவல்களை வெளியிட்ட எஹியாகான்

Sri Lankan Peoples Eastern Province Kalmunai
By Rakshana MA Jun 10, 2025 08:43 AM GMT
Rakshana MA

Rakshana MA

சாய்ந்தமருது நகர சபை விடயத்தில் தடுத்தவர்களில் முன்னாள் எம்.பி ஹரீஸூம் ஒருவர் என ஐக்கிய மக்கள் காங்கிரஸ் செயலாளர் ஏ.சி.எஹியாகான் தெரிவித்துள்ளார்.

அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது பகுதியில் அமைந்துள்ள ஐக்கிய மக்கள் காங்கிரஸ் காரியாலயத்தில் நேற்று (9) இரவு நடைபெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இங்கு தொடர்ந்தும் தெரிவிக்கையில், ஹரீஸ் மட்டுமல்ல ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸின் அனைத்து உறுப்பினர்களும் எதிராகவே செயற்பட்டனர். என்னை தவிர அனைவரும் இவ்விடயத்திற்கு எதிர்ப்பினை தெரிவித்திருந்தனர் 

புத்தளம் - கொழும்பு பிரதான வீதியில் விபத்தில் குடும்பஸ்தர் உயிரிழப்பு

புத்தளம் - கொழும்பு பிரதான வீதியில் விபத்தில் குடும்பஸ்தர் உயிரிழப்பு

சாய்ந்தமருது நகர சபை

வெளியிடங்களில் பல்வேறு மாயைகளை காட்டிவிட்டு உள்ளக கலந்துரையாடல்கள் கூட்டங்களில் நகர சபையினை சாய்ந்தமருது மக்களிற்கு கொடுக்கக்கூடாது என்று கூறி வந்தார்கள்.

சாய்ந்தமருது நகர சபை விடயத்தில் சர்ச்சை தகவல்களை வெளியிட்ட எஹியாகான் | Saindamaruthu Nagar Sabai Issue

அதாவது, கொடுத்தால் பிரிந்துவிடும், கொடுக்க கூடாது அது போய்விடும், விற்கப்பட்டு விடும். இவ்வாறு பல்வேறு கதைகளை கட்டிவிட்டார்கள்.

முன்னாள் எம்.பி.ஹரீஸ் சாய்ந்தமருது நகர சபையினை பிரித்து கொடுத்தால் கல்முனை பறிபோய்விடும் என்று நினைத்தார். அது பொய்யான விடயம். இவருடன் இணைந்து பல உறுப்பினர்கள் இவ்விடயத்தில் எதிராகவே இருந்தார்கள்.

கல்வி அமைச்சின் சுற்றறிக்கைக்கு அதிபர்கள் எதிர்ப்பு

கல்வி அமைச்சின் சுற்றறிக்கைக்கு அதிபர்கள் எதிர்ப்பு

திட்டங்கள்..

இவ்விடயத்தில் ஆர்வத்துடன் ஈடுபட்ட பள்ளிவாசல் தலைவரது கையையும் தட்டிவிட்டு அவமானப்படுத்தினார்கள்.

சாய்ந்தமருது நகர சபை விடயத்தில் சர்ச்சை தகவல்களை வெளியிட்ட எஹியாகான் | Saindamaruthu Nagar Sabai Issue

நான் கூட பல்வேறு சந்தர்ப்பங்களில் பள்ளிவாசல் தலைவரை அழைத்து சம்பந்தப்பட்டவர்களுடன் சந்திப்பினை ஏற்படுத்தி கொடுத்திருக்கின்றேன்.

அவர்கள் அச்சபையினை கொடுத்திருக்கலாம். ஆனால் இவர்கள் திட்டமிட்டு தடுத்தார்கள். எனவே தான் ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸை தவிர எவரும் சாய்ந்தமருது நகர சபை விடயத்தை தடுக்கவில்லை என்பதை தெளிவாக என்னால் கூற முடியும் என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

அம்பாறையில் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளின் வீடுகளுக்கு அடிக்கல் நடும் வைபவம் முன்னெடுப்பு

அம்பாறையில் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளின் வீடுகளுக்கு அடிக்கல் நடும் வைபவம் முன்னெடுப்பு

நாட்டில் மேற்கொள்ளப்படும் திடீர் சுற்றிவளைப்புகள் : வெளியான அதிர்ச்சி தகவல்

நாட்டில் மேற்கொள்ளப்படும் திடீர் சுற்றிவளைப்புகள் : வெளியான அதிர்ச்சி தகவல்

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW 


GalleryGalleryGalleryGalleryGallery