திருக்கோவிலில் ஆர்ப்பாட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.. பிரதேச சபையின் தவிசாளர் வெளியிட்ட தகவல்
அம்பாரை மாவட்டம் திருக்கோவில் பிரதேச சபையின் நிருவாக எல்லைக்குட்டபட்ட பிரதேசத்தில் எந்தவொரு ஆர்ப்பாட்டங்களையும் நடாத்துவதற்கு நான் தடையுத்தரவு விதிக்கவில்லை என பிரதேச சபையின் தவிசாளர் சுந்தரலிங்கம் சசிகுமார் தெரிவித்துள்ளார்.
நேற்று இடம்பெற்று இருந்த அம்பாரை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் சங்கத்தினர் ஊடகங்களுக்கு வழங்கிய அறிக்கைகளுக்கு மறுப்பறிக்கை தெரிவித்து, இன்று (17) அவரது இல்லத்தில் இடம்பெற்ற ஊடகச் சந்திப்பின் போது மேலுள்ளவாறு குறிப்பிட்டுள்ளார்.
போராட்டத்திற்கான அனுமதி
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், வர்த்தகர்களின் சந்தை நடவடிக்கைகளை பாதிக்கும் வகையில் பொது சந்தை வளாகத்தில் மாத்திரம் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுப்பதற்கு தடையுத்தரவினை விதித்து இருந்தேன்.
அம்பாரை மாவட்டம் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர்களால் நடாத்தப்பட்டு வரும் போராட்டங்களுக்கு நான் எந்தவொரு தடையுத்தரவும் விதிக்கவில்லை.
அவர்களின் உரிமைக் குரலுக்கு தொடர்ந்தும் நான் ஆதரவு வழங்க தயாராகவே இருக்கின்றேன்.
ஆனால் திருக்கோவில் பிரதேச பொது சந்தையின் வர்த்தக நடவடிக்கைகளுக்கு இடஞ்சலாக இருக்கின்ற சில விடயங்களை சரிசெய்து பொதுச்சந்தை வளாகத்தினை முற்றுமுழுதாக வர்த்தக நடவடிக்கைகளை விரிவுபடுத்தப்படுவதற்கான திட்டங்களை தற்பொது முன்னெடுத்து வருகின்றோம்.
சட்ட நடவடிக்கை
அந்தவகையில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் ஆர்ப்பாட்டங்களை பொதுச்சந்தை வளாகத்திற்கு புறம்பாக நடத்துமாறு நான் தெரிவித்திருந்தேன்.
இதனை சிலர் அரசியல் நோக்கங்களுக்காக இவர்களை பிழையாக வழிநடத்தி இருக்கின்றனர். நான் என்றும் தமிழ் மக்களின் விருப்பத்திற்கு முறனாக செயற்படுபடமாட்டேன் என்பதனை இங்கு உறுதிபடத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
தொடர்ந்தும் இவ்வாறு ஆர்ப்பாட்டங்களை மட்டும் நடத்துவதால் எமக்கான தீர்வுகள் கிடைக்கப்போவதில்லை. எனவே நீதி மன்றங்களில் பாதிக்கப்பட்ட தரப்பினர் வழக்கு பதிவுகளை செய்து தமக்கான நீதிகளை பெற்றுக் கொள்வதற்கான சட்டரீதியான செயற்பாடுகளிலும் ஈடுபட வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |