இலங்கை வங்குரோத்து அடைந்ததா..! மத்திய வங்கி ஆளுநரின் அறிவிப்பு
Nandalal Weerasinghe
IMF Sri Lanka
Economy of Sri Lanka
employee provident fund
By Mayuri
இலங்கை வங்குரோத்து அடைந்த நாடு என்று எவ்வித அறிவிப்பும் விடுக்கப்படவில்லை என மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், பொருளாதார நெருக்கடியின் போது, கடனை செலுத்துவதை தற்காலிகமாக நிறுத்தி வைக்கும் நடவடிக்கை மாத்திரமே எடுக்கப்பட்டிருந்தது.

இலங்கை மக்களை நசுக்கும் வற் வரி : ஆடம்பர கேளிக்கை விடுதிகளில் கொண்டாட்டங்களில் ஈடுபடும் அரசியல்வாதிகள்
சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவு
நாடு பொருளாதார நெருக்கடியில் இருக்கும் போது சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவைப் பெற முடியாமல் போயிருந்தால், நெருக்கடி மேலும் உக்கிரமடைந்திருக்கும் என குறிப்பிட்டுள்ளார்.
மேலும், அடுத்த தேர்தலில் வெற்றிபெறும் எந்தவொரு அரசாங்கமும் இந்த வேலைத்திட்டத்தை முன்னெடுப்பது அவசியம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |