இலங்கையின் மேலும் பல பகுதிகளில் அறிமுகமாகும் புதிய நடைமுறை

By Mayuri Nov 14, 2023 05:54 PM GMT

மேலும் 5 பகுதிகளில் இ-பில்லிங் முறையை நடைமுறைப்படுத்த திட்டமிட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை இன்று அறிவித்துள்ளது.

அந்தவகையில், தெஹிவளை, களனி, ஸ்ரீ ஜயவர்தனபுர, மாத்தறை மற்றும் அம்பலாங்கொட பிரதேசங்களில் வசிக்கும் CEB வாடிக்கையாளர்கள் தமது மின் கட்டணங்களை டிஜிட்டல் வடிவில் குறுஞ்செய்தி அல்லது மின்னஞ்சல் ஊடாக பிரத்தியேகமாகப் பெறுவார்கள்.

இது அச்சிடப்பட்ட காகித பில்களை வழங்கும் வழக்கமான நடைமுறையை நிறுத்துவதைக் குறிக்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

வரவிருக்கும் மாதங்களில் அச்சிடப்பட்ட காகித பில்களை வழங்குவது படிப்படியாக இடைநிறுத்தப்படும் என்பதால், இந்த வசதியான சேவைக்கு உடனடியாக பதிவு செய்யுமாறு CEB நாடு தழுவிய அனைத்து வாடிக்கையாளர்களையும் ஊக்குவிக்கிறது.