பதவி விலக போதில்லை! மத்திய வங்கி ஆளுநர்

Central Bank of Sri Lanka Nandalal Weerasinghe
By Kamal Mar 27, 2024 01:53 AM GMT
Kamal

Kamal

சம்பள அதிகரிப்பு பிரச்சினைகளுக்காக தாம் பதவி துறக்கப் போவதில்லை என மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

மத்திய வங்கியின் பணியாளர்கள் அண்மையில் தங்களது சம்பளங்களை உயர்த்திக் கொண்ட விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.

எனினும் இந்தப் பிரச்சினைகக்காக பதவி விலக போவதில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

பதவி விலக போதில்லை! மத்திய வங்கி ஆளுநர் | Ceb Salary Hike

பதவி விலக போவதில்லை

நாட்டுக்காக செய்யக்கூடிய சேவையை செய்ய முடியாத நிலை ஏற்பட்டால் மட்டுமே பதவியை விட்டு விலகிச் செல்ல நேரிடும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

நிறுவனத்தின் பிரதானி என்ற வகையில் பணியாளர்கள் தொடர்பில் தமக்கு பொறுப்பு உண்டு என அவர் தெரிவித்துள்ளார்.

பதவி விலக போதில்லை! மத்திய வங்கி ஆளுநர் | Ceb Salary Hike

பணியாளர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் மீளாய்வு செய்யப்படுவதாகவும் அதன் அடிப்படையில் பரிந்துரைகள் செய்யப்படும் எனவும் மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.