இலங்கையில் வாகனங்களின் விலை மீள அதிகரிப்பு
இலங்கையின் உள்நாட்டு சந்தையில் மோட்டார் வாகனங்களின் விலைகள் மீளவும் அதிகரித்து செல்லும் நிலை பதிவாகி உள்ளதாக வாகன விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
பொதுப் போக்குவரத்து மற்றும் சரக்கு வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது.
மோட்டார் வாகனங்களுக்கான இறக்குமதி அனுமதி எனினும் மோட்டார் வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு இன்னமும் அரசாங்கம் அனுமதி வழங்கவில்லை என அவர்கள் சுட்டிக் காட்டி இருந்தனர்.
இந்த நிலையினால் நாட்டில் தொடர்ந்தும் வாகனங்களின் விலை அதிகரித்துச் செல்லும் போக்கினை அவதானிக்க முடிவதாக தெரிவித்துள்ளனர்.
உள்நாட்டில் பயன்படுத்தப்படும் வாகனங்களின் விலைகள் தொடர்ச்சியாக உயர்வடைந்து செல்வதாகவும் இது மேலும் உயர்வடையும் சாத்தியங்கள் காணப்படுவதாகவும் வாகன விற்பனையாளர் தெரிவித்துள்ளனர்.