மூதூரில் வாய்க்காலுக்குள் தடம் புரண்டு வீழ்ந்த கார்
Trincomalee
Sri Lankan Peoples
Eastern Province
Accident
By Rakshana MA
மூதூர் (Mutur) பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இருதயபுரம் வாய்க்காலுக்குள் காரொன்று தடம் புரண்டு வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த சம்பவம் திருகோணமலை - மட்டக்களப்பு பிரதான வீதியில் நேற்று (21) மாலை இடம்பெற்றுள்ளது.
வேகக் கட்டுப்பாடு
குறித்த விபத்தில் காரின் சாரதி சிறு காயங்களுடன் உயிர் தப்பியுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்முனையிலிருந்து - திருகோணமலை நோக்கி பயணித்த குறித்த காரில் ஏற்பட்ட திடீர் பழுது காரணமாக காரானது வேகக் கட்டுப்பாட்டை இழந்து அருகிலுள்ள வாய்க்காலினுள் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரியவந்துள்ளது.
மேலும், இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மூதூர் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |


