யாழில் மீட்கப்பட்ட ஒரு தொகை போதைப்பொருட்கள்

Jaffna Sri Lanka Sri Lanka Police Investigation
By Harrish Jul 03, 2024 09:45 PM GMT
Harrish

Harrish

யாழ்ப்பாணம்(Jaffna) - பருத்தித்துறை, புலோலி காட்டுப் பகுதியில் மறைத்து வைத்திருந்த ஒரு தொகை போதைப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், குறித்த போதைப்பொருட்கள் நேற்றைய தினம்(03.07.2024) மீட்கப்பட்டுள்ளன.


மேலதிக விசாரணை

இதன்போது, ஒரு கிலோ எடையுடைய கேரளக் கஞ்சா, 290 போதை மாத்திரைகள் மற்றும் தராசு ஒன்று என்பன மீட்கப்பட்டுள்ளன.

யாழில் மீட்கப்பட்ட ஒரு தொகை போதைப்பொருட்கள் | Cannabis And Narcotic Pill Recovery In Jaffna

எனினும், சந்தேகநபர்கள் எவரும் கைது செய்யப்படவில்லை என்பதுடன் பருத்தித்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW 
Gallery