சம்மாந்துறையில் ரணிலுக்கு ஆதரவு தெரிவித்து பிரசார நடவடிக்கை

Ampara Ranil Wickremesinghe Sri Lanka Presidential Election 2024
By Laksi Sep 07, 2024 10:15 AM GMT
Laksi

Laksi

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை ஆதரித்து இன்று (7) சம்மாந்துறை நகரில் பிரசார நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வானது தேசிய காங்கிரஸின் உச்சபீட உறுப்பினரும், சம்மாந்துறை தொகுதி இளைஞர் அமைப்பாளருமான ஆகிப் அன்சாரின் நெறிப்படுத்தலிலும் முன்னாள் அமைச்சரும், தேசிய காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஏ.எல்.எம். அதாஉல்லா தலைமையில் நடைபெற்றுள்ளது.

வாக்காளர்கள் அட்டை விநியோகிக்கும் பணிகள் குறித்து வெளியான தகவல்

வாக்காளர்கள் அட்டை விநியோகிக்கும் பணிகள் குறித்து வெளியான தகவல்

வர்த்தகர்களிடம் வேண்டுகோள்

இதன்போது, சம்மாந்துறை சந்தை, நகர வர்த்தக நிலையங்களுக்கு சென்ற ஏ.எல்.எம். அதாஉல்லா ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவினை வழங்குமாறு வர்த்தகர்களிடம் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

சம்மாந்துறையில் ரணிலுக்கு ஆதரவு தெரிவித்து பிரசார நடவடிக்கை | Campaign In Support Of Ranil For Sammanthurai

இந்நிகழ்வில் தேசிய காங்கிரஸ் முக்கியஸ்தர்கள், ஐக்கிய தேசிய கட்சியின் சம்மாந்துறைக்கான வட்டார அமைப்பாளர்களான எம்.எச்.எம். அஸ்வர், ஏ.எல். இப்ராலெப்பை, எம்.எம். இஸ்மாயில் ஆகியோரும் கலந்து கொண்டு வாக்கு சேகரிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

ஜனாதிபதித் தேர்தலில் சஜித்தை ஆதரித்தமைக்கு ஹக்கீமின் ஆதரவாளர்கள் எதிர்ப்பு

ஜனாதிபதித் தேர்தலில் சஜித்தை ஆதரித்தமைக்கு ஹக்கீமின் ஆதரவாளர்கள் எதிர்ப்பு

அரச உத்தியோகத்தர்களின் அதிகமான வாக்கு ரணிலுக்கே : காஞ்சன விஜேசேகர தெரிவிப்பு

அரச உத்தியோகத்தர்களின் அதிகமான வாக்கு ரணிலுக்கே : காஞ்சன விஜேசேகர தெரிவிப்பு

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW