அக்குரணை முஸ்லிம் பள்ளிவாசல் மீது குண்டுத்தாக்குதல் நடத்தும் அபாயம்! பொலிஸார் அறிவிப்பு

Kandy Sri Lanka
By Fathima Apr 18, 2023 07:43 PM GMT
Fathima

Fathima

அக்குரணை முஸ்லிம் பள்ளிவாசல் மீது குண்டுத் தாக்குதல் நடத்தப்படுவதற்கான திட்டமொன்று தொடர்பில் தகவல் கிடைத்துள்ளது.

பொலிஸார் அக்குரணை பள்ளிவாசலுக்கு சென்று இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.

அக்குரணை முஸ்லிம் பள்ளிவாசல் மீது குண்டுத்தாக்குதல் நடத்தும் அபாயம்! பொலிஸார் அறிவிப்பு | Bomb Attack On Akkurnai Muslim Mosque

இந்த தகவலை அடுத்து பாதுகாப்பை தாம் உறுதிப்படுத்துவதாகவும் பொலிஸார் அறிவித்துள்ளதாக அக்குரணை பள்ளிவாசல் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இந்த விடயம் தொடர்பில் அக்குரணை மக்கள் பொறுப்புடன் இருக்க வேண்டும் என பள்ளிவாசல் நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது.

அத்துடன், தமது கட்டளையை மீறி பயணிக்கும் வாகனங்கள் மீது துப்பாக்கி சூடு நடத்துவதற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தமக்கு அறிவித்துள்ளனர் என அக்குரணை பள்ளிவாசல் தலைவர் சட்டத்தரணி அஸ்மீன் பாரூக் தெரிவித்துள்ளார்.