திருகோணமலையில் கடற்கரை சுத்தம் செய்யும் நிகழ்வு முன்னெடுப்பு

Trincomalee Sri Lankan Peoples Eastern Province Clean Sri lanka
By Rakshana MA Jun 02, 2025 03:15 AM GMT
Rakshana MA

Rakshana MA

சுற்றாடல் தினத்தை முன்னிட்டு திருகோணமலையில் கடற்கரை சுத்தம் செய்யும் நிகழ்வு நேற்று (01.06.2025) காலை பட்டினமும் சூழலும் பிரதேச செயலகத்தின் உள்துறைமுக வீதியில் உள்ள கடற்கரைப் பகுதியில் நடைபெற்றது.

இந்த நிகழ்வின், பங்கேற்பாளர்களால் 70 பைகளாக (ஒவ்வொன்றும் சுமார் 30 கிலோ) மொத்தம் 2,100 கிலோ குப்பைகள் சேகரிக்கப்பட்டு அகற்றப்பட்டன.  

புத்தர் சிலைகள் முளைப்பது புதிதல்ல

புத்தர் சிலைகள் முளைப்பது புதிதல்ல

விழிப்புணர்வு

அதேவேளை இந்த நடவடிக்கையானது, சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நோக்குடன் மக்கள் இடையே விழிப்புணர்வை ஏற்படுத்தியது.     

திருகோணமலையில் கடற்கரை சுத்தம் செய்யும் நிகழ்வு முன்னெடுப்பு | Beach Cleaning Trinco Srilanka

மேலும், இந்த நிகழ்வில் திருகோணமலை மாவட்ட செயலாளர் டபிள்யூ.ஜீ.எம்.ஹேமந்தகுமார, மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.சுதாகரன், பிரதேச செயலாளர் மதிவண்ணன், மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் கரையோர பாதுகாப்பு மற்றும் கரையோர வளங்கள் முகாமைத்துவ திணைக்கள உத்தியோகத்தர்கள் உட்பட 150க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

கிழக்கில் ஒருவருக்கு அமைச்சர் பதவி கிடைக்கு வாய்ப்பு

கிழக்கில் ஒருவருக்கு அமைச்சர் பதவி கிடைக்கு வாய்ப்பு

கல்முனையில் முன்னெடுக்கவுள்ள விசேட செயற்பாடு

கல்முனையில் முன்னெடுக்கவுள்ள விசேட செயற்பாடு

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW