நாட்டை பாதுகாக்கும் வரையில் ரணிலுக்கு ஆதரவு வழங்கப்படும் : பசில் உறுதி

Sri Lanka Politician Political Development Current Political Scenario
By Shalini Balachandran Jul 06, 2024 07:10 PM GMT
Shalini Balachandran

Shalini Balachandran

நாட்டு மக்களை பாதுகாக்கும் வரையில் அதிபர் ரணில் விக்ரமசிங்கவிற்கு (Ranil Wickremesinghe) ஆதரவு வழங்கப்படும் என சிறிலங்கா பொதுஜன முன்னணியின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ச (Basil Rajapaksa) தெரிவித்துள்ளார்.

குறித்த விடயத்தை முன்னாள் அமைச்சர் ரோஹித அபேகுணவர்தனவின் 27 ஆண்டு கால அரசியல் பயணத்தை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்வில் பங்கேற்று உரையாற்றும் போதே அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு, சந்தர்ப்ப சூழ்நிலையினால் சிறிலங்கா பொதுஜன முன்னணியின் தவிசாளர் கட்சியை விட்டு வெளியேறிய போதும் சந்தர்ப்ப சூழ்நிலைக்கு ஏற்ப நாட்டை மீட்கக் கூடிய ஆற்றல் ரணிலுக்கு இருந்துது என அவர் தெரிவித்துள்ளார்.

சந்தர்ப்ப சூழ்நிலை

எனவே, ரணில் விக்ரமசிங்கவிற்கு தொடர்ந்தும் ஆதரவளிக்கப்படும் என பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார் என சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

நாட்டை பாதுகாக்கும் வரையில் ரணிலுக்கு ஆதரவு வழங்கப்படும் : பசில் உறுதி | Basil Assured Support For Ranil

மேலும், இந்த நிகழ்வில் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச (Mahinda Rajapaksa), கோட்டாபய ராஜபக்ச (Gotabaya Rajapaksa), நாடாளுமன்ற உறுப்பினர்களான நாமல் ராஜபக்ச (Namal Rajapaksa) மற்றும் தம்மிக்க பெரேரா ஆகியோரும் பங்கேற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள்...!