முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலியவுக்கு பிணை

Keheliya Rambukwella Sri Lanka Law and Order
By Laksi Sep 11, 2024 03:22 PM GMT
Laksi

Laksi

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட மூவருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.

மாளிகாகந்த நீதவான் நீதிமன்றம் இன்று  (11) இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

தரமற்ற இம்யூனோகுளோபுலின் ஊசி மருந்துகளை கொள்வனவு செய்தமை தொடர்பில் மேற்படி சந்தேகநபர்கள் கடந்த பெப்ரவரி 2ஆம் திகதி கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.

நாட்டில் இடம்பெறும் ஊழல் வெளியே வந்தால் ரணிலுக்கு தான் அவமானம்: ஹரீஸ் எம்.பி

நாட்டில் இடம்பெறும் ஊழல் வெளியே வந்தால் ரணிலுக்கு தான் அவமானம்: ஹரீஸ் எம்.பி

பிணை

இதனையடுத்து, விளக்கமறியலில் வைக்கப்பட்டு வந்த அவர் உட்பட மூன்று சந்தேக நபர்கள் இன்று மாளிகாகந்த நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே பிணையில் விடுதலை செய்யப்பட்டனர்.

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலியவுக்கு பிணை | Bail On Keheliya

இதேவேளை, கைது செய்யப்படும் போது அமைச்சராக இருந்த கெஹெலிய ரம்புக்வெல்ல, பெப்ரவரி 06 ஆம் திகதி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு கடிதம் ஒன்றை அனுப்பி அமைச்சர் பதவியிலிருந்து விலகி இருந்தமை குறிப்பிடத்தக்கது. 

ரிஷாட்டுடன் இணைந்து சஜித்தின் வெற்றியை உறுதி செய்வோம்: மன்னார் மாவட்ட உறுப்பினர்கள் தெரிவிப்பு

ரிஷாட்டுடன் இணைந்து சஜித்தின் வெற்றியை உறுதி செய்வோம்: மன்னார் மாவட்ட உறுப்பினர்கள் தெரிவிப்பு

ஜனாதிபதி தேர்தலுடன் தொடர்புடைய முறைப்பாடுகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

ஜனாதிபதி தேர்தலுடன் தொடர்புடைய முறைப்பாடுகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW