பிரதமர் மோடி இப்படி செய்வார் என நினைக்கவில்லை! முஸ்லிம் கலைஞர் புகழாரம்
கர்நாடகாவைச் சேர்ந்த புகழ்பெற்ற பிட்ரி கைவினை கலைஞரான ரஷித் அகமது காத்ரி, பத்மஸ்ரீ விருதினைப் பெற்றுக்கொண்ட பின்னர் பிரதமர் மோடி மற்றும் பா.ஜ.இ ஆட்சியைப் புகழ்ந்து பேசியுள்ளார்.
இங்கு கருத்துத் தெரிவித்த அவர் ''நான் முஸ்லிம் என்பதால் பத்ம விருதுகளை பா.ஜ.க அரசு வழங்காது என நினைத்தது தவறு" என பிரதமர் மோடி நிரூபித்து விட்டார் என பாராட்டி உள்ளார்.
விருது பெறும் விழா நிறைவு பெற்றதும் பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் விருது பெற்றவர்களை சந்தித்துள்ளனர்.
நினைத்தது தவறு
அப்போது பிரதமருடன் கைகளைக் குலுக்கிய ரஷித் அகமது காத்ரி, எனக்கு பத்ம விருது கிடைக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் இருந்தபோது இருந்தது.
ஆனால், எனக்கு காங்கிரஸ் ஆட்சியில் விருது கிடைக்கவில்லை. இதற்காக 10 ஆண்டுகள் முயற்சி செய்தேன்.
உங்கள் பா.ஜ.க ஆட்சி வந்ததும் எனக்கு எந்த விருதையும் வழங்காது என எண்ணினேன்.
அதாவது பா.ஜ.க ஆட்சியில் முஸ்லிம்களுக்கு எந்த விருதையும் வழங்காது என நினைத்தேன்.
ஆனால் நான் நினைத்தது தவறு என நீங்கள் நிரூபித்துவிட்டீர்கள். உங்களுக்கு மிகுந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்.
இதனைக் கேட்ட பிரதமர் மோடி புன்னகையுடன் அவருக்கு வணக்கம் தெரிவித்துள்ளார்