பிரித்தானியாவில் பொலிஸ் அதிகாரிக்கு சிறைச்சாலையில் நேர்ந்த விபரீதம்

United Kingdom World
By Harrish Aug 15, 2024 10:31 PM GMT
Harrish

Harrish

பிரித்தானியாவிலுள்ள சிறை ஒன்றில் பொலிஸ் அதிகாரி ஒருவர் மீது கொலை முயற்சி இடம்பெற்றுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பிரித்தானியாவின் டர்ஹாம்(Durham) கவுண்டியில் உள்ள பிராங்க்லாண்ட் சிறையில்(Frankland Prison) கிரேட்டர் மான்செஸ்டர் பொலிஸ் திணைக்களத்தின் துப்பறியும் அதிகாரி ஒருவரே சிறைக்கைதி ஒருவரால் மார்பில் தாக்கப்பட்டுள்ளார்.

றிஷாட் மற்றும் சஜித்திற்கு இடையில் ஒப்பந்தம் கைச்சாத்து

றிஷாட் மற்றும் சஜித்திற்கு இடையில் ஒப்பந்தம் கைச்சாத்து

கொலை முயற்சி 

இதையடுத்து, வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட பொலிஸ் அதிகாரி, தற்போது வீட்டிலிருந்து ஓய்வெடுத்து வருவதாக டர்ஹாம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், தாக்குதல் மேற்கொண்ட சிறைக்கைதி மீது கொலை முயற்சி குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

பிரித்தானியாவில் பொலிஸ் அதிகாரிக்கு சிறைச்சாலையில் நேர்ந்த விபரீதம் | Attempted Murder Of A Police Officer In Uk

இதன்போது, 62 வயதுடைய டேவிட் டெய்லர்(David Taylor) என்ற சந்தேக நபரே தாக்குதல் மேற்கொண்டுள்ளதுடன் தற்போது காவலில் வைக்கப்பட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

மட்டக்களப்பில் திறக்கப்படவுள்ள புதிய மதுபானசாலை: எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்

மட்டக்களப்பில் திறக்கப்படவுள்ள புதிய மதுபானசாலை: எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்

கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து புதிய பேருந்து சேவை ஆரம்பம்

கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து புதிய பேருந்து சேவை ஆரம்பம்