மட்டக்களப்பில் திறக்கப்படவுள்ள புதிய மதுபானசாலை: எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்

Batticaloa SL Protest Eastern Province
By Laksi Aug 15, 2024 09:40 AM GMT
Laksi

Laksi

மட்டக்களப்பு - வவுணதீவு பிரதேசத்தில் திறக்கப்படவுள்ள மதுபானசாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து பிரதேச பொதுமக்களினால் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த ஆர்ப்பாட்டமானது இன்று (15) ஒன்றிணைந்த சமூக மட்ட அமைப்பின் ஏற்பாட்டில் மண்முனை மேற்கு, வவுணதீவு பிரதேச செயலகத்திற்கு முன்னால் இடம்பெற்றுள்ளது.

இதன்போது, மட்டக்களப்பின் அபிவிருத்தி மதுபான சாலையா, அழிக்காதே அழிக்காதே கலாசாரத்தை அழிக்காதே, வேண்டாம் வேண்டாம் மதுபானசாலை வேண்டாம் போன்ற கோசங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் தமது எதிர்ப்பை தெரிவித்தனர்.

வேட்புமனுக்கள் ஏற்கும் நடவடிக்கை நிறைவு

வேட்புமனுக்கள் ஏற்கும் நடவடிக்கை நிறைவு

சமூக விரோத செயற்பாடுகள் 

அத்தோடு, குறித்த மதுபானசாலை ஆயித்தியமலை பகுதியில் திறக்கப்படவிருப்பதாகவும் இது திறக்கப்படுமானால் சமூக கலாசார சீர்கேடுகள், சமூக விரோத செயற்பாடுகள் அப்பகுதியில் இடம்பெறும் எனவும், பாடசாலை மாணவர்கள் பாதிப்புக்குள்ளாவார்கள் எனவும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

மட்டக்களப்பில் திறக்கப்படவுள்ள புதிய மதுபானசாலை: எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் | Demonstration In Batticaloa Against New Pub

இந்த ஆர்ப்பாட்டத்தில் அந்த பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள், தமிழ் கல்வி அபிவிருத்தி ஒன்றியம், சமூக மட்ட அமைப்புக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

மேலும், ஆர்ப்பாட்டம் நிறைவில் அரசாங்க அதிபர், மதுவரித் திணைக்கள அதிகாரி போன்றோருக்கு பிரதியிடப்பட்ட மனு ஒன்று மண்முனை மேற்கு பிரதேச செயலாளரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச சந்தையில் இயற்கை எரிவாயுவின் விலை அதிகரிப்பு

சர்வதேச சந்தையில் இயற்கை எரிவாயுவின் விலை அதிகரிப்பு

சட்டப்படி வேலை செய்யும் தொழிற்சங்க நடவடிக்கையில் கல்விசாரா ஊழியர் சங்கம்

சட்டப்படி வேலை செய்யும் தொழிற்சங்க நடவடிக்கையில் கல்விசாரா ஊழியர் சங்கம்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW