பலஸ்தீன மக்களுக்கு எதிரான தாக்குதல்களை வன்மையாகக் கண்டித்த சஜித்

Sajith Premadasa Sri Lanka Israel-Hamas War
By Harrish Jul 05, 2024 10:50 AM GMT
Harrish

Harrish

பலஸ்தீன மக்களுக்கு எதிரான தாக்குதல்கள் மற்றும் இஸ்ரேலின் அரச பயங்கரவாதத்தை வன்மையாகக் கண்டிப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

‘பிரபஞ்சம்’ 285ஆவது SMART வகுப்பறை மட்டக்களப்பு, காத்தான்குடி பத்ரியா வித்தியாலயத்திற்கு வழங்கப்பட்ட நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

மனிதாபிமானமற்ற தாக்குதல்

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

“நாங்கள் கண்டிப்பாக பலஸ்தீன மக்களுடன் இணைந்து நிற்போம். இஸ்ரேலின் அரச பயங்கரவாதம் மூலம் பலஸ்தீன மக்களுக்கு எதிரான மனிதாபிமானமற்ற தாக்குதல்களை நாம் கண்டிக்கிறோம். 

பலஸ்தீன மக்களுக்கு எதிரான தாக்குதல்களை வன்மையாகக் கண்டித்த சஜித் | Attacks Against Palestinian People Saji

இந்த மனிதாபிமானமற்ற தாக்குதலை உடனடியாக நிறுத்துமாறு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹுவிடம் கூற விரும்புகின்றோம்.

இந்த வருட இறுதிக்குள் இலங்கை பலஸ்தீன மக்களுடன் இரட்டைப் பேச்சு இல்லாமல் ஒன்றாக நிற்கும்.” என அவர் தெரிவித்துள்ளார்.

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள்