இலங்கையில் உள்ள ஓமான் நாட்டு ஆடை தொழிற்சாலையின் பணிப்பாளர் மீது தாக்குதல்!
கட்டான பிரதேசத்தில் உள்ள ஓமான் நாட்டு ஆடை தொழிற்சாலையின் நிர்வாக பணிப்பாளர் கல்ஃபான் அல் ஒபைதானி என்பவர் தொழிற்சாலை வளாகத்தில் உள்ள அவரது பங்களாவில் அடையாளம் தெரியாத கும்பலால் கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளார்.
நேற்றைய தினம் (30.03.20232) இரவு இடம்பெற்ற இத் தாக்குதலின் போது அவர் தங்கியிருந்த பங்களாவும் கடுமையாகச் சேதமாக்கப்பட்டுள்ளது.
இந்த தாக்குதலின் பின்னணியில் அப்பிரதேசத்தைச் சேர்ந்த அரசியல் பிரமுகர் ஒருவர் இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
சிறீ ஜெயவர்தனபுர மருத்துவமனை
அரசியல் உள்நோக்கம் கொண்ட இந்த கும்பல்களால் தாங்கள் தொடர்ந்து துன்புறுத்தலுக்கும் அச்சுறுத்தலுக்கும் உள்ளாகி வருவதாக ஆடைத் தொழிற்சாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
தாக்கப்பட்ட கல்பான் ஒபைதானி (55 வயது) தற்போது சிறீ ஜெயவர்தனபுர மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
ஆடை தொழிற்சாலை காவலாளியும் குண்டர்களால் தாக்கப்பட்டுள்ளதோடு இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.