அஸ்வெசும கொடுப்பனவு தொடர்பில் வெளியான புதிய தகவல்
Government Of Sri Lanka
Sri Lankan Peoples
Money
Aswasuma
By Dhilak
அடுத்த மாதம் மேலும் 400,000 குடும்பங்களுக்கு அஸ்வெசும கொடுப்பனவு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த விடயத்தை கிராமப்புற மேம்பாடு, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக அதிகாரமளித்தல் அமைச்சு தெரிவித்துள்ளது.
இதற்கான தகுதியான நபர்களைத் தேர்ந்தெடுப்பது தற்போது இறுதி கட்டத்தில் இருப்பதாக அமைச்சர் உபாலி பன்னிலகே குறிப்பிட்டுள்ளார்.
மொத்த குடும்பங்களின் எண்ணிக்கை
கடந்த ஏப்ரல் மாதம் முதல் இடைநிலைப் பிரிவைச் சேர்ந்த 420,000 குடும்பங்களின் அஸ்வெசும கொடுப்பனவு நிறுத்தப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

அதன்படி, அஸ்வெசும கொடுப்பனவை பெறும் மொத்த குடும்பங்களின் எண்ணிக்கை தற்போது 1.38 மில்லியன் ஆகும்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |