மூத்த குடிமக்களுக்கான கொடுப்பனவு
70 வயதுக்கு மேற்பட்டவர்களைத் தவிர்ந்த மூத்த குடிமக்களுக்கு கொடுப்பனவு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இது அஸ்வெசும நலத்திட்ட உதவிகளைப் பெறும் குடும்பங்களில், மூத்த குடிமக்களுக்கு தபால் மற்றும் துணை அஞ்சல் அலுவலகங்கள் மூலம் மாதாந்த உதவித்தொகை வழங்கப்படும் என்று தேசிய மூத்த குடிமக்கள் தலைமைச் செயலகம் தெரிவித்துள்ளது.
உதவித்தொகை
இதன்படி, அஸ்வெசும உதவித்தொகை பெற்று வரும் மூத்த குடிமக்கள், இந்த மாதத்திற்கான உதவித்தொகையை 20ஆம் திகதி முதல் தபால் மற்றும் துணை அஞ்சல் அலுவலகங்களில் இருந்து பெற முடியும் என்று தேசிய மூத்த குடிமக்கள் தலைமைச் செயலகம் குறிப்பிட்டுள்ளது.
இந்த நிலையில் இம்மாதம், 1,725,795 குடும்பங்கள் அஸ்வெசும திட்ட கொடுப்பனவுகளை பெற்று நன்மையடைகின்றமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |