தனிமைப்படுத்தப்பட்டுள்ள பாகிஸ்தான் ஜனாதிபதி
                                    
                    COVID-19
                
                                                
                    Pakistan
                
                                                
                    World
                
                        
        
            
                
                By Rukshy
            
            
                
                
            
        
    கோவிட் வைரஸ் தொற்றுக்குப் பின்னர், பாகிஸ்தான் ஜனாதிபதி ஆசிப் அலி சர்தாரி ( Asif Ali Zardari) தற்போது தனிமைப்படுத்தலில் இருப்பதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சுவாசப் பிரச்சினை மற்றும் காய்ச்சல் காரணமாக அவர் ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், சிறப்பு மருத்துவர்கள் குழு ஜனாதிபதிக்கு சிகிச்சை அளித்துள்ளதாகவும், அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.
கண் அறுவை சிகிச்சை
ஒக்டோபர் 2024 இல், விமானத்தில் இருந்து இறங்கும்போது கால் உடைந்து ஆசிப் அலி சர்தாரி சிகிச்சை பெற்றுவந்தார்.

மேலும், மார்ச் 2023 இல், சர்தாரி ஐக்கிய அரபு எமிரேட்ஸில் கண் அறுவை சிகிச்சை செய்து கொண்டதாகவும் கூறப்படுகிறது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW | 
 
                 
                 
                                             
     
     
     
     
     
     
     
     
     
     
     
    