சம்மாந்துரையில் கட்டாக்காலி நாய்களுக்கு தடுப்பூசி வழங்கும் திட்டம்
சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட செந்நெல் கிராம பகுதியில் 7 பேரை கட்டாக்காலி நாய் கடித்த சம்பவம் கடந்த புதன்கிழமை(12) பதிவாகி இருந்தது.
இந்நிலையில், மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் (MRI) இற்கு அனுப்பப்பட்ட மாதிரியின் படி, 7 பேருக்கும் கடித்த நாயின் மாதிரி அறிக்கை Rabies positive என அறிவித்துள்ளது.
தடுப்பூசி
இதனைதொடர்ந்து, அப்பிரதேசத்தில் பொது மக்களுக்கு விழிப்புணர்வூட்டல், மற்றும் வளர்ப்பு நாய்கள், கட்டாக்காலி நாய்களுக்கு ARV தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது.
குறித்த நிகழ்வு சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் எம்.எம்.நௌசாதின் ஆலோசனைக்கமைய மாவட்ட மேற்பார்வை பொதுச் சுகாதார பரிசோதகர் ஐ.எல்.எம். லாபீர் மற்றும் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் குழுவினர் ஆகியோர் பங்கேற்று உரிய நடவடிக்கைள் எடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |