கிழக்கில் புதைக்கப்பட்ட ஆயுதங்களை தேடி அகழ்வு நடவடிக்கை முன்னெடுப்பு

Sri Lankan Peoples Eastern Province
By Rakshana MA Jun 14, 2025 10:45 AM GMT
Rakshana MA

Rakshana MA

திருகோணமலை - ஈச்சிலம்பற்று பொலிஸ் பிரிவிலுள்ள முகத்துவார பகுதியில் உள்ள வீடொன்றின் காணியொன்றில் விடுதலை புலிகளால் புதைத்து வைக்கப்பட்டுள்ள ஆயுதங்கள் இருப்பதாக தெரிவித்ததை தொடர்ந்து அகழ்வு பணிகள் முன்னெடுக்கபட்டுள்ளன.

குறித்த இந்த அகழ்வு பணியானது, இன்று (14) காலை பெக்கோ இயந்திரம் மூலம் குறித்த காணியில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தினந்தோறும் குர்ஆனை ஓதி வாருங்கள்

தினந்தோறும் குர்ஆனை ஓதி வாருங்கள்

தேடுதல் பணி முன்னெடுப்பு

மூதூர் நீதிமன்ற நீதிபதி தஸ்னீம் பௌசான் முன்னிலையில் இந்த அகழ்வுப் பணி முன்னெடுக்கப்பட்டது.

ஈச்சிலம்பற்று பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் மூதூர் நீதீமன்றத்தின் அனுமதியுடன் குறித்த அகழ்வுப் பணி முன்னெடுக்கப்பட்டது.

கிழக்கில் புதைக்கப்பட்ட ஆயுதங்களை தேடி அகழ்வு நடவடிக்கை முன்னெடுப்பு | Arms Search In Trincomalee Srilanka

மேலும் இந்த அகழ்வுப்பணியின் போது எந்தவித தடைய பொருட்களும் மீட்கப்படவில்லை.

இந்நிலையில், மூதூர் நீதிமன்ற நீதிபதி அகழ்வினை இடைநிறுத்துமாறு பொலிஸாருக்கு உத்தரவு வழங்கியதையடுத்து சுமார் ஒரு மணி நேரம் முன்னெடுக்கப்பட்ட அகழ்வுப் பணி இடைநிறுத்தப்பட்டது.

குறித்த இடத்திற்கு விசேட அதிரடிப்படையினர், தடையில் பிரிவு பொலிஸார், அரச அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் பிரசன்னமாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

நாட்டில் அத்தியவசிய மருந்துகளுக்கு பற்றாக்குறை

நாட்டில் அத்தியவசிய மருந்துகளுக்கு பற்றாக்குறை

வடக்கிலுள்ள பொலிஸ் நிலையங்களிற்கு விடுக்கப்பட்டுள்ள தாக்குதல் அச்சுறுத்தல்

வடக்கிலுள்ள பொலிஸ் நிலையங்களிற்கு விடுக்கப்பட்டுள்ள தாக்குதல் அச்சுறுத்தல்

  நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW 


GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery